search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை தொகுதி"

    • சட்டசபை தொகுதிக்கும் தலா 14 டேபிள்களில் ஓட்டு எண்ணப்படும். ஒரு டேபிளில் 4 பேர் பணியில் ஈடுபடுவர்.
    • கலெக்டர், தேர்தல் பொது பார்வையாளர்கள், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ நிலை அதிகாரிகள் பொதுவான பணியில் ஈடுபடுவர்.

    ஈரோடு:

    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (இ.வி.எம்), கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி. பேட் ஆகியவை சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    அங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டுள்ளது. மேலும் சி.சி.டி.வி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணி நடந்து வருகிறது. இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 14 டேபிள்களில் ஓட்டு எண்ணப்படும். ஒரு டேபிளில் 4 பேர் பணியில் ஈடுபடுவர்.

    இது தவிர ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான இ.வி.எம்.கள் பாதுகாப்பு அறையில் இருந்து வரிசைப்படி சரிபார்த்து அனுப்ப ஒரு மண்டல உதவி அதிகாரி, ஒரு அலுவலக உதவியாளர் குறைந்தபட்சம் 20 பேர் இருப்பார்கள்.

    இதுதவிர ஒரு தொகுதி க்கு ஒரு டைப் செய்பவர், ஒரு கம்ப்யூட்டர் பதிவாளர், 2 அலுவலக உதவியாளர்கள், போர்டில் எழுதுபவர், மைக்கில் அறிவிப்பாளர், பிரிண்டர்களில் நகல் எடுப்பவர்கள் தனியாக பணி செய்வார்கள்.

    இந்தப் பணிகளில் ஈடுபடும் அனைத்து நிலையிலும் 20 சதவீதம் கூடுதல் அலுவலர் பணியாளர் உடன் இருப்பார்கள். கலெக்டர், தேர்தல் பொது பார்வை யாளர்கள், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ நிலை அதிகாரிகள் பொதுவான பணியில் ஈடுபடுவர்.

    ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு தாசி ல்தார் நிலையில் ஏ.ஆர்.ஒ. க்கள் அவர்களுடன் உதவியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறாக ஒரு சட்டசபை தொகுதிக்கு தலா 80 முதல் 100 பேர் வரை பணியில் ஈடுபடுவார்கள்.

    இதற்காக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி த்துறை, கல்வித்துறை, மத்திய அரசு பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணிகள் அடுத்த ஒரு வாரத்தில் நிறைவு செய்து தேர்தல் ஆணைய ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 5633 ஆண் வாக்காளர்களும் 6484 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 12117 வாக்காளர்கள் நீக்கப்பட் டுள்ளனர்.
    • கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 2498 ஆண் வாக்காளர்களும் 3233 பெண் வாக்காளர்கள் 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 736 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் இன்று வாக்காளர் விரைவு பட்டியல் வெளி யிடப்பட்டது. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 51 ஆயிரத்து 169 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 2498 ஆண் வாக்காளர்களும் 3233 பெண் வாக்காளர்கள் 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 736 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 5633 ஆண் வாக்காளர்களும் 6484 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 12117 வாக்காளர்கள் நீக்கப்பட் டுள்ளனர்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 3,726 ஆண் வாக்காளர்களும் 4,529 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8255 வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    பத்மநாபபுரம் தொகு தியில் 3,389 ஆண் வாக்காளர்களும் 3,867 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் ஒருவர் என மொத்தம் 7257 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    விளவங்கோடு தொகு தியில் 2884 ஆண் வாக்காளர்களும் 4,166 பெண் வாக்காளர்களும் 6 இதர வாக்காளர்கள் என மொத்தம் 7056 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 4591 ஆண் வாக்காளர்களும் 6154 பெண் வாக்காளர்களும் 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 748 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    6 சட்டமன்ற தொகுதிகளி லும் 22,721 ஆண் வாக்கா ளர்களும் 28,433 பெண் வாக்காளர்களும் 15 இதர வாக்காளர்கள் என மொத்தம் 51,169 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதிதாக வாக்காளர் பட்டியலில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3864ஆண் வாக்காளர்களும் 5520 பெண் வாக்காளர்களும் 6 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9390 பேர், சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் 1763 வாக்காளர்களும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2,391 வாக்கா ளர்களும் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 1471 வாக்காளர்களும் பத்நாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 1363 வாக்கா ளர்களும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1256 வாக்காளர்களும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 1146 வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ×